சென்னை: பாலியல் புகாரில் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டு வந்த பத்மா சேஷாத்ரி கல்வி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழும்பிய குற்றச்சாட்டில் அஷோக் நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளியான பத்மா சேஷாத்ரி பால பவன் (PSBB) பள்ளியில் பணிபுரிந்தவர் ராஜகோபாலன். கே.கே. நகரில் அமைந்துள்ள இந்த பள்ளியின் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளின் போது ஆபாச குறுஞ்சிய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.


இதன் பேரில், இன்று காலை பள்ளிக்கு விசாரணை செய்ய சென்ற அதிகாரிகளுக்கு முதலில் பள்ளி நிர்வாகம் தேவையான ஒத்துழைப்பைத் தரவில்லை என்று கூறப்பட்டது. எனினும், பின்னர் பள்ளி நிர்வாகம் அந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என அறிவித்தது. அந்த ஆசிரியர் மீது மாணவர்கள் சில மோசமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாகவும், அவர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டது பற்றி தெரிய வந்ததாகவும், இந்த காரணங்களுக்காக அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.


இந்த விவகாரம் குறித்து முழு விசாரணையை கோரி 1,000 க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து பள்ளி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையில், நிர்வாகம் அவர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தது. "தவறான நடத்தை தொடர்பான சில கடுமையான குற்றச்சாட்டுகள் உங்களுக்கு எதிராக வந்துள்ளன. மேலும் சமூக ஊடகங்கள் மூலம் இவற்றைப் பற்றி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ: PSBB Sexual Harassment: பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


ஞாயிற்றுக்கிழமை மாலை முதல், PSBB இன் தற்போதைய மற்றும் முன்னர் இப்பள்ளியில் படித்த மாணவர்கள், PSBB பள்ளியின் ஆசிரியருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் (Sexual Harassment) மற்றும் தகாத நடத்தை குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணம் இருந்தனர். மாணவர்களை தகாத முறையில் தொடுவது, மாணவர்களின் உடல் குறித்து கருத்து தெரிவிப்பது, தன்னுடன் மாணவர்களை வெளியே வர சொல்வது, ஆன்லைன் வகுப்பில் மேலாடை இல்லாமல் வருவது, இடுப்பில் ஒரு துண்டு மட்டும் அணிந்துகொண்டு ஆன்லைன் வகுப்புக்கு வருவது, ஆபாச வலைத்தள இணைப்புகளை தனது மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று ஆசிரியர் மீது பல குற்றசாட்டுகள் கூறப்பட்டுள்ளன. 


இதற்கிடையில் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இன்று காவல் துறை அந்த ஆசிரியரிடம் விசாரணை நடத்தியது. நீண்ட நேரமாக நடந்த விசாரணைக்குப் பின்னர் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது. ஆசிரியர் ராஜகோபாலன் காவல் துறை அவரை விசாரணைக்கு அழைக்கும் முன்னர் தன் தொலைபேசியில் இருந்த பல தரவுகளை நீக்கியுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த தரவுகளை மீட்க தொழில்நுட்ப வல்லுனர்களிடம் அவரது தொலைபேசி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


முன்னதாக, ஆசிரியர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக கல்வித்  துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ALSO READ: பி.எஸ்.பி.பி பள்ளி ஆசிரியருக்கு எதிராக வலுக்கும் குரல்கள்: பணியிடை நீக்கம் செய்தது பள்ளி நிர்வாகம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR