சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதேபோல அண்ணா பல்கலை கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழக முழுவதும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் விடாமல் தற்போது வரை மழை பெய்து வருகிறது.


கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் பல சாலைகளில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல வீடுகளில் தண்ணீர் புகுத்துள்ளது. 


இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை பல்கலை கழக தேர்வுகள் ஒத்திவைத்து பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலை. கீழ் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.