இலங்கை அருகே புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''இலங்கை மற்றும் அதை ஒட்டிய பகுதியில் புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.என்று தெரிவித்தார்.


மேலும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகாலை நேரங்களில் சில இடங்களில் பனிப்பொழிவு இருக்கக்கூடும்'' என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.