இடைவிடாத சினிமா மற்றும் அரசியல் பணிகளுக்கு இடையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு ரிலாக்ஸ் பயணமாக இமயமலை புறப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக ரஜினி அறிவித்தார். 


இதனையடுத்து தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாவட்ட வாரியாக அதற்கு நிர்வாகிகள் நியமித்து வருகிறார். இதற்கிடையே பொது வெளியில் அவ்வப்போது தனது அரசியல் கருத்துகளை தெரிவித்து வருகிறார் ரஜினி.


இதையடுத்து, வேலப்பன்சாவடியில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த ரஜினி, எம்.ஜி.ஆரை போல ஏழை மக்களுக்கான ஆட்சியை என்னால் தர முடியும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தியது.


இதற்கிடையில், ரஜினிகாந்த் நடித்துள்ள `காலாதிரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் ரஜினி நடிக்க இருக்கிறார். திரைப்பணிகளிலும் தொடர்ந்து ரஜினி கவனத்தை செலுத்தி வருகிறார்.


இந்நிலையில், ஆன்மிக பயணமாக ரஜினிகாந்த் இன்று இமயமலை புறப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் இருந்து விமானத்தின் மூலம் இமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவுக்கு செல்லும் அவர், அங்கிருந்து தர்மசாலா, ரிஷிகேஷ் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கிறார். அங்குள்ள அவருடைய ஆன்மிக வழிகாட்டிகள், குருமார்களை ரஜினி சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதையடுத்து, இந்த பயணத்தின் போது முக்கிய ஆன்மீக வழிகாட்டிகள், குருமார்களை சந்தித்து ரஜினி ஆசிபெறுகிறார். ரிஷிகேஷில் பாபாஜி ஆசிரமம் ஒன்றை ரஜினி கட்டியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் அதன் திறப்பு விழா நடந்தது. சினிமா படப்பிடிப்பு வேலைகள், தொடர்மழை காரணமாக பாபாஜி ஆசிரமம் திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்கவில்லை. 


எனவே, இந்த சுற்றுப்பயணத்தின் போது பாபாஜி ஆசிரமத்துக்கு ரஜினி செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் ஆசிரம விரிவாக்க பணிகளையும் பார்வையிடுகிறார். 1 வாரம் கழித்து ரஜினி சென்னை திரும்புகிறார் என கூறுகின்றனர். 


இதற்கு ஆன்மீக சாமியார் மலையேறி விட்டார் என்று ரஜினியின் இமயமலை பயணம் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.