Akash Ambani Coimbatore Visit: உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் சில மாதங்களுக்கு முன் உலகமே வியந்து பார்க்கும் வகையில் மூன்று நாள்கள் கொண்டாட்டத்துடன் மும்பையில் நடைபெற்றது. அவரின் மகன் திருமணத்திற்கு உலகம் முழுவதும் இருந்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்படியிருக்க, கோயம்புத்தூரில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி படை சூழ வருகை தந்தது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகாஷ் அம்பானி கோவையில் யாருடைய திருமணத்தில் கலந்துகொள்ள வருகை தந்தார் என பலரும் ஆச்சர்யப்படும் நிலையில், அதுகுறித்து முழு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. 


யாருடைய திருமணத்திற்கு வந்தார் ஆகாஷ் அம்பானி?


கர்நாடகாவை சேர்ந்த பிராந்தர் தாஸ் என்ற பெரிய தொழிலதிபரின் மகனான கோகுல் தாஸ் மற்றும் கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர்கள் ரவி - சித்ரா தம்பதியின் மகள் நிக்கி ஆகியோரின் திருமணத்தில் கலந்துகொள்ளவே ஆகாஷ் அம்பானி கோயம்புத்தூருக்கு வருகை தந்துள்ளார். மணமகன் கோகுல் தாஸ், ஆகாஷ் அம்பானியின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. கோகுல் தாஸ் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறது. இவர்களுக்கு வெளிநாடுகளில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.



மேலும் படிக்க | ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க அழைப்பு


40 கார்கள், 4 விமானங்கள்...


கோகுல் தாஸ் - நிக்கி தம்பதிக்கு கடந்த செப். 7, 8ஆம் தேதிகளில் கோவையின் சிறுவாணி அருகே உள்ள பெருமாள்பதி என்ற இடத்தில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் திருமணம் வரவேற்பு நடந்துள்ளது. தனது நண்பர் திருமணத்தில் பங்கேற்க மும்பையில் இருந்து பெரும் படையுடன் ஆகாஷ் அம்பானி செப்.7ஆம் தேதி இரவே புறப்பட்டு வந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கான பாதுகாப்பு வீரர்கள் உள்பட மொத்தம் 4 விமானங்களிலும், 40 கார்களிலும் வந்திறங்கி உள்ளார் என கூறப்படுகிறது. ஆகாஷ் அம்பானி மட்டுமின்றி வேறு சில தொழிலதிபர்களும் இந்த திருமணத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.


மனைவியுடன் வந்த ஆகாஷ் அம்பானி


ஆகாஷ் அம்பானி கோவை வந்த உடன் ஈஷா மையத்திற்கு சென்று அங்கிருந்து முத்திப்பாளையம் அருகே உள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்கி உள்ளார். பின்னர், செப். 8ஆம் தேதி காலையில் மனைவி ஸ்லோகா மேத்தா உடன் அங்கிருந்து திருமணம் நடந்த இடத்திற்கு ஆகாஷ் அம்பானி செல்ல ஹெலிகாப்டர் ஒன்றை ஒரு பிரபலம் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின், அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு வந்து ஆதியோகி சிலை ஆகியவற்றை வழிபட்ட பின்னர் அன்று இரவே அவர்கள் மும்பை திரும்பியதாக கூறப்படுகிறது. 



ஆகாஷ் அம்பானி - ஸ்லோகா மேத்தா தம்பதி கோவையின் முத்திப்பாளையம் பகுதியில் உள்ள CSR Landmark Resorts என்ற  பெரிய சொகுசு விடுதியில்தான் தங்கியிருந்தர். இந்த சொகுசு விடுதிக்கு ஆகாஷ் அம்பானி வருகை தந்தபோதும், அவர் புறப்படும்போதும் சொகுசு விடுதியின் உரிமையாளர் ஷ்ரவானி ரெட்டி வரவேற்பு அளித்துள்ளார். மேலும், முகேஷ் அம்பானியுடன் அந்த சொகுசு விடுதியின் உரிமையாளர் ஷ்ரவானி ரெட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், ஆகாஷ் அம்பானிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு வீடியோவையும் அந்த ரிசார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கனவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்த தயாராகும் ஜியோ! விர்சுவல் ரியாலிடியில் முகேஷ் அம்பானி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ