மாமங்கம் என்ற இடத்தில் சேலம் பெங்களூர் தேசிய நெஞ்சாலையில் சேலத்திலிருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், சாலையில் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதி, எதிர்ப்பக்கம் வந்துக்கொண்டிருந்த ஆம்னி பேருந்தின் மீது மோதியதில் பேருந்தில் இருந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த ஆம்னி பேருந்து கேரளாவுக்கு சென்றுக் கொண்டிருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



தனியார் பஸ் மிகுந்த சேதத்திற்கு உள்ளானது. அதில் பயணம் செய்ய ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நள்ளிரவில் நடந்துள்ளது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுக்குறித்து சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


சம்பவ இடத்திற்கு சேலம் மாவட்டத்தின் ஆட்சியாளர் ரோகிணியும் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.