டிடிவி தினகரன் சசிகலாவை நாளை பெங்களுர் சிறையில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். திஹார் சிறையில் இந்த வழக்கில் சிக்கிய மேலும் மூன்று வருடம் அடைக்கப்பட்டார்.


இந்நிலையில் ஜாமின் கோரி, டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த டெல்லி கோர்ட் டிடிவி தினகரனுக்கு ஜாமின் வழங்கியது. இதையடுத்து நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் சென்னை வந்தார்.


இந்தநிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நாளை பெங்களூர் சிறையில் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.