கடந்த 9 ஆம் தேதி திண்டிவனம் ரோஷணை போலீஸ் நிலையத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் புகார் கொடுத்து இருந்தார். அதில்., 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 7 ஆம் தேதி சசிகலா (Sasikala) குறித்து ஊடகங்களில் சில கருத்துகளைத் தெரிவித்து இருந்தேன். இந்த கருத்துக்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் தன் அடியாட்களை வைத்து செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பேசியும், பதிவிட்டும் வருகிறார்கள். மேலும் எனக்கு 500க்கும் மேற்பட்டோர் கொலை மிரட்டல் விடுத்தும் வருகின்றனர்.


ALSO READ | சசிகலாவுக்கு ஆதரவாக கூட்டம் கூட்டிய 80 பேர் மீது வழக்குப்பதிவு


சசிகலா பற்றி பேசினால் உன்னையும், உன் குடும்பத்தையும் தொலைத்து விடுவோம் எனவும் மிரட்டுகிறார்கள். எனவே கொலை மிரட்டல் விடுக்கவும், ஆபாசமாக பேசவும் காரணமாக இருந்த சசிகலா மீதும், என் செல்போனுக்கு வந்த அழைப்புகளில் பேசிய மர்ம நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் புகார் அவர் அளித்து இருந்தார். 


இந்த புகாரின்படி சசிகலா உள்பட கொலை மிரட்டல் விடுத்த அனைவரின் பெயரில் 506(1)-கொலை மிரட்டல், 507- எங்கு இருந்து பேசுகிறோம் என்று குறிப்பிடாமல் அநாகரிகமாக பேசுதல், 109-அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசுதல், 67 (ஐ.பி. சட்டம்)-தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அச்சுறுத்தும் வகையிலான தகவலைப் பதிவிடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


ALSO READ | சசிகலாவுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர் ரத்து செய்த டெல்லி உயர்நீதிமன்றம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR