சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் நிராகரித்து. இதனையடுத்து, பெங்களூரு கோர்ட் சசிகலாவை உடனடியாக சரணடைய உத்தரவு விட்டது. அப்படி சரணடைய வில்லை என்றால் அரஸ்ட் வாரன்ட் வேண்டாம் தர படும் என்று கோர்ட் உத்தரவு இட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் அவர் இன்று மாலைக்குள் சரணடைவார் என சசிகலா வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து சசிகலா இன்று மாலைக்குள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைவது உறுதியாகியுள்ளது.


சொத்துகுவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சரணடைய கால அவகாசம் கேட்டு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட் நிராகரித்துள்ளது.


சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை, சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூவரும் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் நேற்று உறுதி செய்தது. ஜெயலலிதா மறைந்ததால் அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து ஐகோர்ட் நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். 


தாங்கள் சரணடைய கால அவகாசம் கோரி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தார் ஆனால் சுப்ரீம் கோர்ட் இந்த மனுவை நிராகரித்துள்ளது.


இந்நிலையில், உடல்நிலையை காரணம் கேட்டு, சரணடைய இரண்டு வார கால அவகாசம் கோரி சசிகலா தரப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் வாய்மொழியாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்த சுப்ரீம் கோர்ட், சசிகலா கோரிக்கையை ஏற்க முடியாது. தீர்ப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டது. எனவே இன்று மாலைக்குள் பெங்களூரு கோர்ட்டில் சசிகலா சரணடைவார் என வழக்கறிஞர் கூறியுள்ளார்.