தூத்துக்குடியில் சிவன் கோவில் அருகே உள்ள தையல் கடை ஒன்றில் வேலை பார்த்து வருபவர் உதயகுமார். இவருக்கும் பக்கத்து கடையில் பணிபுரியும் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டார் தெரியவர கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதில் இருதரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று தையல் கடையில் வேலைப்பார்த்து கொண்டிருந்த உதயகுமாரை பெண்ணின் சகோதரர் முத்துராமன் மற்றும் மேலும் ஒருவர் சுற்றி வளைத்துள்ளனர். எதிர்பாராத நேரம் பார்த்து மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து உதயகுமாரை சரமாரியாகக் குத்தியிருக்கிறார், முத்துராமன். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அவர்கள் தப்பித்து ஓடியிருக்கிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட கர்ப்பிணிப் பெண் பரிதாப சாவு..!


இதற்கிடையே, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த உதயகுமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு போராடிய நிலையில் தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து வழக்குப்பதிவு செய்து முத்துராமனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கையின் காதலனை அண்ணன் கத்தியால் குத்திய சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR