மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!

மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை 3 மாணவர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார். தற்போது அதன் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 2, 2022, 08:27 PM IST
  • மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்
  • கள்ளக்காதலனை வைத்து வீடியோ எடுத்த கொடூரம்
  • கசிந்த வீடியோ - சிக்கிக்கொண்ட ஆசிரியை..!
மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம்  - கசிந்த வீடியோ..! title=

மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் 3 மாணவர்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் வெளியாகி வேகமாக பரவியது. இது குறித்து மதுரை மாநகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில் குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை, உதவி கமி‌ஷனர் அக்பர்கான் ஆகியோர் அதிரடியாக தனிப்படை அமைத்தனர். அதன் பேரில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மாணவர்களுடன், பெண் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் யார் மூலம் முதன் முதலாக பரப்பப்பட்டது ? என்று கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அந்த வீடியோ திருப்பரங்குன்றம் பாலாஜி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவரின் செல்போனுக்கு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த மாணவரை வரவழைத்து அந்த ஆபாச வீடியோவை அனுப்பியது யார்? என்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த வீடியோவை தனது மாமா வீரமணி (வயது 39)  என்பவர் அனுப்பியதாக கூறியிருக்கிறார். அதன்பேரில் தனக்கன் குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த வீரமணியை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. 

தனக்கன்குளத்தில் உள்ள தளச்செங்கல் கடையில் வீரமணி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2010-ம் ஆண்டு சென்னைக்கு ரெயிலில் சென்றார். அப்போது அவருக்கு மதுரையைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையான 45 வயது பெண் அறிமுகமானார். இதையடுத்து அவர்கள் தங்களின் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர். அதன்பிறகு இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியபடி இருந்தனர். இதனால் அவர்களுக்கு இடையே நெருக்கம் அதிகமாகி கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியையின் வீட்டிற்கு வீரமணி அடிக்கடி சென்று வந்துள்ளார். இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் ஆசிரியை பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகு கல்லூரி படித்து வரும் தனது மகனுடன் ஆசிரியை தனியாக வசித்து வந்தார். கணவர் பிரிந்து சென்றபிறகு வீரமணியுடனான தொடர்பை ஆசிரியை அதிகரித்துக் கொண்டார். இந்தநிலையில் அந்த ஆசிரியைக்கு ஆபாச படம் பார்ப்பதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது. அதில் பார்க்கும் காட்சிகளை போன்று தான் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த ஆசிரியை தனது வீட்டில் ஏராளமான மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். 

madurai teacher

இதனால் தன்னிடம் படிக்க வந்த பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு செல்போனில் ஆபாச படம் அனுப்பி, அவர்களை தனது ஆசை வலையில் வீழ்த்தியுள்ளார். அந்த பள்ளி மாணவர்கள் 2 பேர் மற்றும்  கல்லூரி மாணவர் ஒருவர் என 3 பேரை வரவழைத்து உல்லாசம் அனுபவித்தபடி இருந்துள்ளார். மேலும் மாணவர்களுடன் உல்லாசமாக இருந்ததைத் தனது கள்ளக்காதலன் வீரமணி மூலமாக வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவை ஆசிரியை பார்த்து ரசித்தபடி இருந்துள்ளார். இதேபோல் மாணவர்களுடன் பலமுறை நெருக்கமாக இருந்து, அதனை வீடியோ எடுத்திருக்கிறார். அப்படி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைத்தான் வீரமணி தனது மருமகனுக்கு அனுப்பி இருக்கிறார். இதனால் போலீசில் வீரமணி சிக்கி இருக்கிறார். மேற்கண்ட விவரங்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க | மனைவியுடன் தகாத உறவு.. நண்பனை வெட்டிப் புதைத்த கொடூரம்..!

மாணவர்களுடன், ஆசிரியை உல்லாசமாக இருந்த வீடியோவை பரப்பிய வீரமணி மற்றும் ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர். அவர்களில் வீரமணி கைது செய்யப்பட்டார். ஆசிரியையிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் ஆசிரியை பயன்படுத்திய செல்போன்கள் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 50-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்தன. ஆசிரியையிடம் டியூசன் படித்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | Crime: கள்ளக் காதல் விவகாரம்; மனைவியை கொன்று புதைத்த கணவன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News