நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வது மிகச் சரியானது என பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நெல்லையில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அவரிடம் " தொடர்ந்து நடிகர்கள் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து வரும் நீங்கள், அரசியலைக் குறித்து நடிகர் அஜித்தின் கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். 


அதற்கு பதில் அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வது தீர்க்கமான முடிவு. அஜித்தின் முடிவு மிகச் சரியானது மற்றும் பாராட்டுக்குரியது. இதுபோன்று மற்ற நடிகர்களும் தெளிவாக இருக்க வேண்டும் எனக்கூறினார். 


வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். யாரோடும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை எனத் தெளிவாக கூறினார்.