சென்னை: நடிகர் வடிவேலு நான்காண்டு காலமாக நடிக்க முடியாமல் இருந்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ரெட் கார்டு விதித்திருந்தது. பின்னர் ஷங்கருடன் சுமூகமாக பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்பட்டதால் மீண்டும் நடிக்கிறார் வடிவேலு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் வடிவேலு ஷங்கருக்கும் தனக்குமான பிரச்சனையில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு கண்டுள்ளார். அவரை பார்த்த நாள்முதல் எனக்கு ஏறுமுகம்தான் என்று பேசினார்.


அதுகுறித்து தற்போது பேசியிருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வடிவேலு பஞ்சாயத்தை தீர்த்து வைத்தது முதல்வர் அல்ல. நான்தான் என்று கூறியுள்ளார். வடிவேலுவின் இடத்தை நிரப்புவதற்கு யாரும் இல்லை என்றும் இன்னொருவன் பிறந்துதான் வர வேண்டும் என்றும் சீமான் பேசினார்.


Also Read | ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்திருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார் - யோகி பாபு


விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட தமிழ் சினிமாவின் அடையாளங்கள் சிவாஜியும், வடிவேலுவும் என்று கூறியதாக சீமான் தெரிவித்தார். வடிவேலு இல்லாமல் மீம்ஸ் உலகமே இல்லை எனக் கூறிய சீமான் அதுபற்றிதான் நாம் தினமும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.


மேலும் பேசிய சீமான், திமுக ஆட்சியையே நாம் தமிழர் கட்சிதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்றார். நாங்கள் சொல்வதைதான் திமுக அறிவிக்கையாக வெளியிடுகிறது. இதனால் எங்களுக்கு பெருமைதான் என்று பேசினார் சீமான்.


Also Read | மாற்றுத்திறனாளிகளை கேலி செய்வது சமூக பண்பல்ல: சந்தானத்திற்கு கண்டனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR