தமிழகத்தின் மின்சாரத்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அப்போது அவருக்கு உதவி செய்ய வந்தவர்களை அவர் எட்டி உதைப்பது போன்ற வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செந்தில் பாலாஜி கைது:


தமிழ்நாட்டின் தற்போதைய மின்சாரத்துறைய, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர், கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக பணியில் இருந்தார். அப்போது, 100க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்த வழக்கு விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்ததை ஒட்டி, அமலாக்கத்துறை அதிகாரிகளை செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர். கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் சோதனை நடந்தது. அதையொட்டி அவரது சென்னை இல்லத்திலும் சேதனை நடத்தப்பட்டது. நேற்று, சுமார் 17 மணி நேரத்திற்கும் மேல் நடந்த சோதனை முடிவில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்..!


நெஞ்சுவலி..


செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவரை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்து செல்ல இருந்தனர். அப்பாேது அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இந்த நிலையில், அவர் ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவர் செய்த சம்பவம் ஒன்று வீடியோவில் பதிவாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. 



உதவ வந்தவரை எட்டி உதைத்த செந்தில் பாலாஜி..


செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டவுடன் அவரை காரில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உடனிருந்தவர்கள் ஆயத்தமாகினர். அப்போது, அவருக்கு உதவ வந்தவரை, செந்தில் பாலாஜி படுத்துக்கொண்டே எட்டி உதைத்துள்ளார். அதுவும் ஒருமுறை அல்ல, நான்கு-ஐந்து முறை காலை உதைத்துள்ளார். இந்த வீடியாே தற்போத வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


எல்லாம் நடிப்பா…?


பொதுவாகவே ஏதேனும் வலையில் சிக்கி கொண்டால் தமிழக அரசியல்வாதிகள் ‘நெஞ்சுவலி’ நாடகமாடுவது வழக்கம் என மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இன்று செந்தில் பாலாஜியின் நெஞ்சுவலி சம்பவமும் அந்த நாடகங்களுள் ஒன்றோ என எப்போதோ மக்களுக்கு சந்தேகம் வந்து விட்டது. பாஜக கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி செந்தில் பாலாஜி அப்பட்டமாக நாடகமாடுவதாக தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திரைக்கதை, வசனம், நடிப்பு” சுமாராக உள்ளது என தமாஷாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், செந்தில் பாலாஜி நடத்தும் இந்த நாடகத்தில் அரியல் கட்சி தலைவர்கள் பலர் நன்றாகவே துணை கதாப்பாத்திரமாக செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | டெல்லிக்கு அழைத்து செல்லப்படுகிறாரா செந்தில் பாலாஜி? அமலாக்கத்துறையின் ப்ளான் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ