சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது பூமி அடியிலிருந்து கெமிக்கல் கலவை வெளியேறியது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.


பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிழக்கு முத்தையா தெரு பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பூமிக்கு அடியில் இருந்து கெமிக்கல் கலவை பீய்ச்சியடித்து வெளியேறி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபோல் இப்பகுதியில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது.