தண்டவாளம் பராமரிப்பு பணி காரணமாக தெற்கு ரயில்வே ரயில்களின் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரும் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 6-ஆம் நாள் வரை தாடா - சூளூர்பேட் நிலையங்களுக்கு இடைப்பட்ட பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் படுவதால் மேற்குறிப்பிட்ட பாதையில் 01.05hrs முதல் 06.00hrs வரை தொடர்வண்டிகள் இயக்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இதன் காரணமாக தொடர்வண்டி பயணத்தில் கீழ்காணும் மாற்றங்கள் கடைப்பிடிக்கப் படவுள்ளது...



வண்டி எண் 42451: கும்முடிப்பூண்டி - சூளூர்பேட்டை EMU வண்டியானது வரும் செப்டம்பர் 24-ஆம் நாள் முதல் அக்டோபர் 7-ஆம் நாள் வரை முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


வண்டி எண் 42402: MMC EMU வண்டியானது வரும் செப்டம்பர் 24-ஆம் நாள் முதல் அக்டோபர் 7-ஆம் நாள் சூளுர்பேட்டையில் இருந்து இயக்கப்படுவதற்கு பதிலாக கும்மிடிப்பூண்டியில் இருந்து MMC வரை இயக்கப்படும்.