எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்குகிறது. இந்த இரு மாநிலங்களிலும் மொத்தம் 10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுத்தேர்வுக்காக 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத்தேர்வு இன்று முதல் துவங்கி வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்தது. 


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 4 லட்சத்து 83 ஆயிரத்து 120 பேர். மாணவிகள் 4 லட்சத்து 81 ஆயிரத்து 371 பேர் எழுதுகிறார்கள்.