முதல் முறையாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொத்தம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,63,668 மாணவர்கள் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் +1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை கடந்தாண்டு அறிவித்தது. அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது. 


சென்னையில் மட்டும் 407 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 422 பேர் இத்தேர்வினை எழுதி வருகின்றனர். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் கூடுதலாக ஒரு மணிநேரம் கால அவகாசம் வழங்கப்பட உள்ளது. 


மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளதையடுத்து, இந்த ஆண்டு முதல் தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.