திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தண்டாயுத சுவாமி கோயிலின் கும்பாபிஷேக விழாவில் சமஸ்கிருத மந்திரங்களுடன் தமிழிலும் மந்திரங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வியாழக்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிவித்தது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கு குறித்த விசாரணையின் போது தமிழ்நாடு அரசு இதை தெரிவித்தது. முருகர் பற்றிய பல தமிழ் இலக்கியங்கள் உள்ளதாகவும், முருகரை புகழ்ந்து பல தமிழ் புலவர்கள் பாடல்களை பாடியுள்ளதாகவும், அவர் பக்தர்களால் அன்போடு தமிழ் கடவுள் முருகன் என அழைக்கப்படுவதாகவும் விசாரனையில் கூறப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கில் கருவறை, வேள்விசாலை கோபுர கலசம் அனைத்திலும் தமிழில் மந்திரம் வேண்டும் என கூறி பல்வேறு அமைப்பினர், பெண்கள் கையில் தீ சட்டியை கையில் ஏந்தியவாறு பழனி பேருந்து நிலையம் முன்பு வேண்டுகோள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குகொண்டுள்ளனர். 


அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வருகின்ற ஜனவரி 27ஆம் தேதி குமாபிசேகம் நடைபெறுகிறது.16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிசேகம் நடைபெறுவதால் பக்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். கோவில் நிர்வாகம் இதற்கான அனைத்து பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 


இதனையொட்டி கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த கோரியும், கருவறை, வேள்விசாலை, கோபுர கலசம் வரை அனைத்திலும் தமிழில் மந்திரம்  வேண்டும் என கோரிக்கை விடுத்தும் தெய்வ தமிழ்ப் பேரவை தலைமையில், பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.


மேலும் படிக்க | Erode By Election Candidate: ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவே போட்டியிடும்! ஜிகே வாசன் அறிவிப்பு 


மேலும் தாரை தப்பட்டைகளை இசைத்தபடியும், பெண்கள் அக்னி சட்டியை  கையில் ஏந்தியவாறும் பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தின் போது குண்டம் வைத்து தீயிட்டு வேள்வி நடத்தியும், முருகன் கவச பாடல்களை பாடியும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து பழனி பேருந்து நிலையம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



முன்னதாக, பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிற 20-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என தெய்வத்தமிழ் பேரவை சார்பில் முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி தெய்வத்தமிழ் பேரவை சார்பில் பழனியில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


மேலும் படிக்க | குழந்தைகளுக்கு பொம்மை வாங்கும் போது கவனம் தேவை: அமைச்சர் மா சுப்பிரமணியன் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ