அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வாடிப்பட்டியில் மறியல் போராட்டம் நடைபெற்றுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அலங்காநல்லூரில் 21 மணி நேரம் போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசார் தடியடி நடத்தி கைது செய்துள்ளனர். இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. 


இதனையடுத்து வாடிப்பட்டியில் உள்ள அனைத்து கிராம மக்களும் ஒன்று திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று கூறியுள்ளனர். 


அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் பிறபிக்கும் வரை உணவு உண்ணப் போவதில்லை என்று மாணவர்கள் தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினார்கள். 


இதேப் போன்று புதுக்கோட்டையிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி புதுக்கோட்டையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


சென்னையில் மெரினா கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற போராடி வருகின்றனர்.


அலங்காநல்லூர் மாணவர்களை விடுதலை செய்ய வேண்டும என்ற கோரிக்கையை முன் வைத்து விழுப்புரத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 


அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக் கோரி திருச்சியில் கல்லூரி மாணவர்கள் மவுன போராட்டம் நடத்தியுள்ளனர்.