நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்ராப்பட்டி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி லட்சுமி ஆடு மேய்த்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழனிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருப்பதால் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. அதன்படி வழக்கம் போல் நேற்று முன்தினம் பழனி மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த கணவன் பழனி வீட்டில் இருந்த கடப்பாரையால் மனைவி லட்சுமியை தாக்கியுள்ளார். இந்த விபத்தால் மனைவி லட்சுமியின் மண்டை உடைந்து ரத்தம் சரிந்தது. 


ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்


இந்நிலையில் மனைவி இறந்து விட்டதாக நினைத்து அதிர்ச்சி அடைந்த பழனி, கொலை வழக்கில் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்கள் என்று எண்ணினார். இதனால் பயந்த பழனி அங்கிருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக 2 பேரும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனி பலியானார். லட்சுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இது குறித்து தற்போது தகவல் அறிந்த திருச்செங்கோடு போலீசார் பழனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாலி கட்டிய மனைவியை கடப்பாறையால் கணவனே அடித்துக்கொலை செய்ய துணிந்து தானும் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியினையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR