Crime News: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியை சேர்ந்த சின்ன முத்து (வயது 45) என்பவர் தென்னை மரம் ஏரும் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சின்ன முத்துவிற்கும் நாகஜோதி (வயது 40) இருவருக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் தற்போது 3 குழந்தைகள் உள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் சின்ன முத்து, அவரது மனைவி நாகஜோதி வேரு ஒரு நபருடன் தொடர்பில் இருப்பதாக நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். திடீரென அவர் தேங்காய் வெட்டும் அரிவாளை கொண்டு மனைவியின் வலது கை மணிகட்டிற்கு கீழ் ஓங்கி வேட்டியுள்ளார். 


இதன் காரணமாக நாகஜோதியின் கை மணிகட்டிற்கு கீழ் துண்டாகியது. இதனை தொடர்ந்து பக்கத்தில் இருந்தவர்கள் கை துண்டிக்கப்பட்ட நிலையில், நாகஜோதிய தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பெற்று வருகிறார்.



ALSO READ |  வாழ வேண்டிய வயதில் சிறையில் காலம் தள்ளும் 18 வயது இளைஞர்கள்...!!


இந்நிலையில் கணவர் மனைவியின் கையை அரிவாளால் வெட்டி துண்டித்த சம்பவம் தொடர்பாக தேவதானப்பட்டி காவல்துறையினர் அவரின் கணவர் சின்னமுத்துவை கைது செய்து வழக்குப் பதிவு செய்து நவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ALSO READ |  Domestic Voilence: மனைவியை அனுப்பாத மாமியாரை கொன்ற மருமகன்



உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR