ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் மற்றும் ஆதரவாளர்கள் சென்ற வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதலால் பரபரப்பு! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க - தினகரன் தரப்பினரிடையே மோதல் நடந்ததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகிறது!


அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைத்தலைவர் டிடிவி தினகரன் இன்று சென்னை தண்டையார் பேட்டைக்கு வந்திருந்தார். அப்பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தினகரன் வந்துள்ளார். அவர் வருகையின் போது, தினகரன் வாகனம் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். தினகரன் ஆதரவாளர்களின் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்கியவர்களை காவல்துறையினர் விரட்டிஅடித்தனர். இதையடுத்து, அப்பகுதியில் அ.தி.மு.க மதுசூதனன் ஆதரவாளர்கள் கூடி, தினகரன் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 


இதனால் தினகரன் ஆதரவாளர்கள், அ.தி.மு.கவினரை தாக்க முயன்றனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சமரசம் பேசினர்.  இருந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நூற்றுக்கணக்கான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.


முன்னதாக ஆர்.கே.நகர் தேர்தல் சமயத்தில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்து பணத்தை காட்டி தினகரன் வெற்றி பெற்றதாகக் கூறி அ.தி.மு.கவினர் தாக்கியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


கல்வீச்சு சம்பவத்தைதொடர்ந்து மதுசூதனன்,டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் திரண்டதால் பரபரப்பு!!