தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்றும் தொற்று பாதிப்பு 27,000 என்ற எண்ணிக்கைக்கு கீழே பதிவாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியதில் இருந்து, தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 11 தினங்களாக குறைந்து வருவது சிறிது நிம்மதி அளிக்கும் விஷயமாக உள்ளது. இன்று 27 ஆயிரத்திற்கும் குறைவான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. அதாவது, இன்று, புதிதாக 26,513 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,23,029 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனா தொற்றுக்காக சிகிச்சையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,131. 


தொற்று பாதிப்பு அளவில் கோவை முதலிடத்தில் உள்ளது. அங்கே அதிகபட்சமாக, 3,332 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 2.467 பேருக்கும், திருப்பூரில் 1,338 பேருக்கும், ஈரோட்டில் 1,653பேருக்கும், சேலத்தில் 1,140 பேருக்கும், செங்கல்பட்டில் 1,106 பேருக்கும், புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது.


தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 490 ஆக உள்ளது. இதை அடுத்து, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,722 ஆக உயர்ந்துள்ளது. 


இன்று ஒரே நாளில் 31,673பேர் குணமாகியுள்ளனர். இதுவரையில் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,02,176 ஆக அதிகரித்துள்ளது.



 ALSO READ | BIG Breaking: CBSE 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR