சென்னை: இன்று, தமிழ்நாட்டில் புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று (Coronavirus in Tamil nadu) உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 984 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக சென்னையில் 1,07,109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

24 மணி நேரத்தில் 6,488 பேர் குணமடைந்துள்ளனர். 119 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 52,759 ஆக உள்ளது.  கொரோனா சிகிச்சையைத் (Corona Treatment) தொடர்ந்து இதுவரை 2, 27, 575 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். அதேபோல இறந்தவர்களின் எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு.


ALSO READ |  தமிழகத்தில் அதிகரிக்கும் COVID-19 உயிரிழப்பு... ஒரே நாளில் 112 பேர் பலி!!


நேற்றைய நிலவரம்: தமிழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மொத்தம் 5,684 புதிய கோவிட் -19 தொற்று மற்றும் 110 இறப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த நோய்தோற்று எண்ணிக்கை 2,79,144 ஆகவும், இறப்பு (Corona Death) எண்ணிக்கை 4,571 ஆகவும் உள்ளது.  அதேபோல 1,091 புதிய பாதிப்புடன் சென்னையின் எண்ணிக்கை 1,06,096 ஐ எட்டியது.


கொரோனா சிகிச்சையைத் தொடர்ந்து 6,272 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர். தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 53,486 ஆக இருக்கிறது. இதுவரை, 5,07,092 பயணிகள் பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் தமிழ்நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதில் 5,718 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.


ALSO READ | E-paas வாங்கித் தருகிறோம் எனக் கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் -எச்சரிக்கை