சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு ஆறு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. எனினும் இதுவும் மிக அதிக அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழான்று தமிழ்நாட்டில் 33,361 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 19,78,621 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 474 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 22,289 ஆக உள்ளது. 


கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 275 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 199 பேரும் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உயிர் இழந்தவர்களில் இணை நோய் இல்லாதவர்கள் 125 பேர் இறந்துள்ளனர். 



தமிழகத்தில் இன்று 30,063 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,13,048 ஆக உள்ளது.


சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 2,779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைப் போலவே இன்று தொற்றின் ஒற்றை நாள் எண்ணிக்கையில் கோவை சென்னையை பின்னுக்குத் தள்ளியுள்ளது. கோவையில் இன்று மட்டும் 4,734 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 


ALSO READ: சற்றே வேகம் தணியும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 புதிய தொற்று பாதிப்பு


இது தவிர தவிர அரியலூரில் 276 பேரும், செங்கல்பட்டில் 1392, கடலூரில் 613, தர்மபுரியில் 304, திண்டுக்கல்லில் 376, ஈரொட்டில் 1699, கள்ளக்குறிச்சியில் 448, காஞ்சிபுரத்தில் 751, கன்னியாகுமரியில் 979, கரூரில் 409, கிருஷ்ணகிரியில் 469, மதுரையில் 1395, நாகப்பட்டினத்தில் 777, நாமக்கல்லில் 883, நீலகிரியில் 434, பெரம்பலூரில் 274, புதுக்கோட்டையில் 385, ராமநாதபுரத்தில் 256, ராணிப்பேட்டையில் 544, சேலத்தில் 987, சிவகங்கையில் 173, தென்காசியில் 461, தூத்துக்குடியில் 667, திருநெல்வேலியில் 454, திருப்பூரில் 2074, திருச்சியில் 1617, வேலூரில் 487, விழுப்புரத்தில் 798, தஞ்சாவுரில் 936, தேனியில் 564, திருப்பத்தூரில் 508, திருவள்ளூரில் 1221, திருவண்ணாமலையில் 734, திருவாரூரில் 487  பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
இன்று தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 18,618 ஆண்களும் 14,743 பெண்களும் அடங்குவர். 


கடந்த வாரம் தமிழகத்தில் (Tamil Nadu) தொடர்ந்து எழுச்சியைக் கண்டு வந்த தொற்றின் அளவு தற்போது ஆறு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி இன்று 33,361 என்ற அளவில் உள்ளது. 


தமிழகத்தில் மே 24 முதல் முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இதற்கு முன்னர், சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருந்தது. ஊரடங்கின் விளைவு தற்போது தெரியத் தொடங்கியுள்ளது என நிபுணர்கள் கூறுகிறார்கள். 


ALSO READ: கொரோனா தடுப்பூசி மையம், சிகிச்சை மையம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR