நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருகிறது. தமிழகத்திலும் புதியதொற்று பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வருவதை காண முடிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் கடந்த 24 மணின் நேரத்தில், 7,817 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,22,497 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 455 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 182 பேர் இறந்தனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் பிடியில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,197ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 78,780 ஆக உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 110 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 70 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 31,015-ஐ எட்டியுள்ளது. 


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 17,043 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இன்று மொத்தமாக 1,72,543 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 7,817 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது.  


இது தவிர தவிர அரியலூரில் 81 பேரும், செங்கல்பட்டில் 328, சென்னையில் 455, கோயம்பத்தூறில் 904 கடலூரில் 197, தர்மபுரியில் 129, திண்டுக்கல்லில் 82, ஈரொட்டில் 870, கள்ளக்குறிச்சியில் 166, காஞ்சிபுரத்தில் 114, கன்னியாகுமரியில் 140, கரூரில் 103, கிருஷ்ணகிரியில் 170, மதுரையில் 151, நாகப்பட்டினத்தில் 135, நாமக்கல்லில் 327, நீலகிரியில் 175, பெரம்பலூரில் 52, புதுக்கோட்டையில் 84, ராமநாதபுரத்தில் 57, ராணிப்பேட்டையில் 145, சேலத்தில் 517, சிவகங்கையில் 77, தென்காசியில் 54,  தஞ்சாவுரில் 370, தேனியில் 97, திருப்பத்தூரில் 74, திருவள்ளூரில் 204, திருவண்ணாமலையில் 206, திருவாரூரில் 110, தூத்துக்குடியில் 119, திருநெல்வேலியில் 51, திருப்பூரில் 477, திருச்சியில் 263, வேலூரில் 95, விழுப்புரத்தில் 126, விருதுநகரில் 112 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  


ALSO READ| Petrol and Diesel: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு வாய்ப்பேயில்லை: தமிழக நிதி அமைச்சர்


தமிழகத்தில்  (Tamil Nadu) கடந்த மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு (Lockdown) வருகிற 21 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 


இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மொத்த மாவட்டங்களை 3 ஆக பிரித்து காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.


ALSO READ: Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR