Tamil Nadu Assembly Election 2021 Results: தமிழகம் உட்பட நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


விராலிமைலை சட்டப்பேரவைத் தொகுதியில், முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


முதல் சுற்றிலேயே 14 ஆவது மின்னணு வாக்குப்பதிவு இயந்தரத்தில் குறியிடப்பட்ட எண்ணில் தவறு இருப்பதாக அறியப்பட்ட பின்னர், அந்த இயந்தரத்தின் எண்ணிக்கையை எண்ண தேர்தல் முகவர்கள் அனுமதிக்கவில்லை.


தவறு உள்ள இயந்திரத்தின் வாக்குகளை பிறகு எண்ணிக்கொள்வதா, அல்லது, காத்திருப்பதா என குழப்பம் நிலவியது. இரண்டாவது சுற்றைத் தொடங்கி விடலாம் என்ற சில கருத்துகளும் வரவே, முகவர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இங்கு சமீபத்திய நிலவரப்படி சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் உள்ளார்.


இதற்கிடையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் சமீபத்திய நிலவரப்படி, திமுக வேட்பாளர் டாக்டர் முகிலன் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போராடிய பாஜக வேட்பாளர் குஷ்புவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. டாக்டர் எழிலன் இதுவரை 3330 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், குஷ்புவிற்கு 1393 வாக்குகள் கிடியத்துள்ளன.


காரைக்குடியில், பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா 1393 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகளைப் பெற்றுள்ளார். 


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR