கடந்த இரண்டு வருடங்களாகவே பரவலாக அனைவரது காதிலும் ஒலிக்கக்கூடிய ஒரு சொல் கொரோனா வைரஸ்.  உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்க செய்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.  பல்வேறு வகையாக அவை உருமாறிக்கொண்டே வருகிறது.  இதனை தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.  அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தாலும் கொரோனாவின் தாக்கம் தணியவில்லை.  மேலும் அரசு வகுத்த கட்டுப்பாடுகளும் முக்கியமானது ஊரடங்கு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | வீட்டின் பூட்டை உடைத்து நகை - வெள்ளி பொருட்கள் திருட்டு


கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு செயல்முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து என அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பித்தது.  ஊரடங்கு உத்தரவின் மூலம் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற போதிலும், இது மக்களுக்கு பெரும்பாலும் பொருளாதார ரீதியிலான பிரச்சனையை ஏற்படுத்தியது என்பது நிதர்சனம்.  அதனை தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வந்தது.  மேலும் மக்களை காக்கும் பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது.  கடந்த ஆண்டில் ஊரடங்கு தளர்வுகள் அதிகம் அளிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் சிறிது உற்சாகத்துடன் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருந்தனர்.  இந்நிலையில் கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. 



கொரோனா அளவிற்கு ஒமிக்ரான் அந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று தகவல்கள் தெரிவித்தாலும், இதன் பாதிப்பால் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருவது மக்களுக்கு மீண்டும் வேதனையை அளிக்கிறது.  அயல்நாடுகளில் காணப்பட்ட இந்த ஒமிக்ரான் பரவல் தமிழகத்திற்குள் ஊடுருவியதால், மீண்டும் ஊரடங்கு எனும் இருண்ட அறைக்குள் மக்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது.  ஒமிக்ரான்  பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஜனவரி-6ம் தேதிஎன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது.  அதன்படி இரவு நேரதில் 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரைக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. 



மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கூடவும், தியேட்டர்களில் 50% மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இறைச்சிகள் வாங்கவும், மற்ற பொருட்கள் வாங்கவும் மக்கள் கூட்டம் அலைமோதும், இதனால் தொற்று பரவ அதிக வாய்ப்புள்ளது.  அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  இந்நிலையில் தமிழக அரசின் உத்தரவின் படி நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட இருக்கிறது, இதில் அத்திவாசிய பொருட்களை தவிர மற்ற பொருட்களை விற்பனை செய்தாலோ, வாங்க சென்றாலோ அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.  மேலும் தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் இந்த சமயத்தில் இவ்வாறு சில குறிப்பிட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பது வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் கவலையை அளித்து இருக்கிறது.


ALSO READ | நீட் தேர்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR