NEET Exam: நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை வெளியீடு

நீட் தேர்வின் தாக்கம் குறித்து முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு மேற்கொண்ட ஆய்வு முடிவுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2021, 06:23 AM IST
NEET Exam: நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கை வெளியீடு title=

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஜூன் மாதம் 10 ஆம் தேதி நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையிலான குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. இக்குழு நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்து அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஜூலை 14 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்படி 165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. 

இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.கே. ராஜன், நீட் (NEET Exam) தேர்வுக்கு ஆதரவாகவும் எதிராகவும் மொத்தம் 86,342 பேர் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலானோர் நீட் வேண்டாம் என்றே கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வின் தாக்கம் எப்படி இருக்கிறது என ஆய்வு செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இது தொடர்பாக முறையான ஆய்வு செய்து நீட் தேர்வு பொதுமக்கள் மத்தியில் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்ற அறிக்கையைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் மற்ற விவரங்களை அரசிடம்தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

ALSO READ | தற்கொலை வேண்டாம்! உங்கள் சகோதரனாக கேட்கிறேன்: முதலமைச்சர் உருக்கமான கடிதம்

இதற்கிடையில் கடந்த 12 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று தமிழ்நாடு (Tamil Nadu) சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தற்போது ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழ்நாடு அரசு தொடங்கலாம் என்றும் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக தனிச் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறலாம் என்றும் நீட் ரத்து சட்டம் இயற்றுவது மாணவர் சேர்க்கையில் மாணவ சமுதாயத்துக்கான சமூக நீதியை உறுதி செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்தவேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட்டிற்கு முன்பும் பின்பும் சேர்ந்த விகிதம், தமிழ் வழி பயின்றவர்கள் சேர்ந்த விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. 201 6ஆம் ஆண்டு வரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை விகிதம் நிலையான வளர்ச்சியில் இருந்துள்ளாது. நீட் தேர்வுக்கு பிந்தைய காலத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை முறையே 18.5, 14.1 சதவீதமாக குறைந்துள்ளது. இதேகாலகட்டத்தில், தனியார் பள்ளிகள் தங்கள் மாணவர் எண்ணிக்கையை எந்த மாற்றமின்றியும் தக்க வைத்துக் கொண்டுள்ளதாக ஏ.கே.ராஜன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல்வேறு அம்சங்கள் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்பித்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதனுடைய முழு அறிக்கையையும் https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N21092966.pdf என்ற பக்கத்தில் காணலாம்.

ALSO READ | NEET vs Counseling: நீட் எழுதிய மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் கவுன்சிலிங்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News