தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை கட்டமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 57,000 அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில், குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கலந்து கொண்டார்.


இந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த பேசினார். அப்போது நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


மேலும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக தமிழக அரசு பள்ளிகளை கட்டமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.