SSLC பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இந்த தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை SSLC பொதுத் தேர்வு நடைபெற்றது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ, மாணவியர் இந்த தேர்வை எழுதியுள்ளனர்.   இந்த தேர்வின் முடிவை இன்று காலை 9.30 மணிக்கு www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து மாணவ, மாணவியர் தெரிந்துகொள்ளலாம். 


ரேங்க் பட்டியல் முறையை கல்வித்துறை ரத்து செய்து, தேர்ச்சி சதவீதத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான், இந்த ஆண்டும் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.


பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் அவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த மொபைல் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கும்போது கொடுத்திருந்த மொபைல் எண்ணிற்கும் மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது வெளியான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 95.2% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இதில் 93.3% மாணவர்களும் 97%  மாணவிகளும் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகள் 3.7 அதிகம் தேர்ச்சியடைந்துள்ளனர். 


இந்நிலையில் இந்த ஆண்டு 98.53% தேர்ச்சி அடைந்து திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று இரண்டாவது இடத்தையும், நாமக்கல் மாவட்டம்   98.45% பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. மேலும் 89.98% தேர்ச்சி பெற்று  வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது.