பெற்ற மகனை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல எழுத்தாளர் சவுபா என்ற சவுந்திரபாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதுரையை சேர்ந்த எழுத்தாளர் மற்றும் பிரபல பத்திரிக்கையாளரான சவுபா என்ற சவுந்திரபாண்டியன், அவரது மகன் போதைக்கு அடிமையானதாலும், தன்னுடன் சொத்து தகராறு ஏற்பட்டதாலும், அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். 


இந்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சவுபா முதலில் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். பின்னர் மதுரை மத்திய சிறையில் இருந்து வரும் அவருக்கு கடந்த 22-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சைபலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.