காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் படப்பை குணா என்கிற என்.குணசேகரன். பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். இவற்றில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இவர் மீது 12 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெள்ளைத்துரை தலைமையில் காவல்துறையினர் தீவிரமாக படப்பை குணாவை தேடி வந்தனர். இந்நிலையில் அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு சரணடைந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


படப்பை குணா ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் நில அபகரிப்பு வழக்கிலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த குற்ற வழக்கில் கொலை மிரட்டல் விட்டதாக,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பெயரில் குண்டர் சட்டம் பதியப்பட்டது. படப்பை குணா கைது செய்வதற்கு முன்பு இவர் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், ஒரு ஆண்டு நன்னடத்தை விதியின்கீழ் குற்ற செயலில் ஈடுபடக் கூடாது என்ற உத்தரவை மீறி குற்றச்செயலில் ஈடுபட்டார். 



இதனால் இவருக்கு 340 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, படப்பை குணாவில் மனைவி எல்லம்மாள் தற்போது ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். ஒன்றிய சேர்மன் பதவிக்கு போட்டியிட்ட அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளருடன் சம வாக்குகளைப் பெற்று குலுக்கல் முறையில் தோல்வி அடைந்தார். 



படப்பை குணாவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்த சமயத்தில், பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்,  எல்லம்மாளை சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. படப்பை குணா உயிருக்கு பயந்து பாஜகவில் சேர்ந்தார், என சமூக வலைத்தளத்தில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மௌனம் காத்தது. 


மேலும் படிக்க | செங்கல்லால் கணவரை அடித்து கொன்ற மனைவி - கொல்லப்பட்டவரின் தம்பி கொடுத்த பகீர் வாக்குமூலம்



இந்நிலையில் படைப்பை குணாவின் மனைவிக்கு மாவட்டத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட மேல்மட்ட நிர்வாகிகள் ஒப்புதலுடன், மாவட்டத் தலைவர் கே. எஸ். பாபு  வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் பட்டியலில், எல்லம்மாள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் துணைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பாஜகவில் பிரபல ரவுடியின் மனைவிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது தற்போது சர்ச்சை கிளப்பியுள்ளது.


மேலும் படிக்க | சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி!


 சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR