தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மேலும், கர்நாடகம், கேரளா, மாவட்டங்களிலும் தீவிரம் அடைந்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கடலூர் துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கதேசம் அருகே காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தின் வானிலையில் மாற்றம் இருக்காது என தகவல். 


தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்றும் தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது!