திருப்பூர் :நீண்ட நாள் பழகி வந்த கள்ளகாதலன் திருமணம் செய்ய மறுத்துவிட்டதால் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை(45), இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  தெய்வானையின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார்.  கூலி வேலை செய்து பிள்ளைகளை வளர்த்து வந்த இவர், மகளுக்கு திருமண வயது வந்ததும் அவரை அருகிலுள்ள ஒரு ஊரில் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | திருமணத்துக்கு ஆசைப்பட்ட ’குடி’மகன் - கொலை செய்த தந்தை


இவரது மகன் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.  இதனையடுத்து தெய்வானை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருப்பூருக்கு குடிபெயர்ந்து அங்கு வாடகைக்கு ஒரு வீட்டில் வசித்து வந்தார்.  தந்து அன்றாட செலவுகளுக்காக அப்பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் தையல் தைக்கும் வேலை பார்த்து வந்த இவருக்கும், உடன் பணிபுரியும் மற்றொரு பணியாளருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.  இந்த பழக்கம் காதலாக மாறியதை தொடர்ந்து இவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது.  ஆனால் தெய்வானையின் கள்ளகாதலனுக்கு ஏற்கனவே இன்னொரு பெண்ணுடன் திருமணம் ஆகிவிட்ட்டது.  இந்நிலையில் தெய்வானை தனது கள்ளகாதலனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார், ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.


இதனையடுத்து தெய்வானை தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் கள்ளகாதலன் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்துள்ளார்.  இருப்பினும் மனமுடைந்த அவர் வீட்டின் முன்பு உள்ள நடுரோட்டில் நின்றுகொண்டு தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீயிட்டு கொளுத்தி தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


ALSO READ | சென்னையில் பூட்டிய வீட்டில் துணிகர திருட்டு: உடன் பணியாற்றியவரும் உடந்தையா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR