தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கூழையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தவசி (56). கூலித்தொழிலாளியான இவரது உறவினர் மகளை பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரபு(23)  என்ற இளைஞர் கடந்த சில தினங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பத்தினருக்கு இடையே விரோதம் வளர்ந்து பகையாக மாறியது. இந்நிலையில் சம்பவத்தன்று, வழக்கம் போல வேலையை முடித்துக்கொண்டு கூழையனூர் ஊருக்கு வந்த தவசி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/B_101.JPG


அப்போது பாலார்பட்டியில் இருந்து கூழையனூர் வந்த பிரபு தவசியுடன் வாக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.‌  ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி தகராறாக மாறியதில் ஆத்திரமடைந்த பிரபு கத்தியால் தவசியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த தவசி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.



மேலும் படிக்க | வாலிபர் தற்பொலை விவகாரம்: விளக்கமளித்த ஈஷா


தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது தொடர்பாக பிரபுவை கைது செய்த வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | 10 வயது சிறுமிக்கு மது ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க வைத்ததாக 6 இளைஞர்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ