தமிழக அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்காடு கோடை விழாவை தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் :-


மாட்டிறைச்சி விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறித்து அரசாணை வந்தபிறகுதான் சரியான பதில் சொல்ல முடியும். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, மக்களுக்கு உழைத்து மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படம் சட்டப் பேரவையில் திறக்கப்படும். இதில் எந்தவித தவறும் இல்லை.


மேலும் கட்சியின் வளர்ச்சிப் பணியைப் பற்றி பேச மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை சென்னையில் திங்கள்கிழமை கூட்டுகிறோம்.


அமைச்சரவையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும், இரு அணியினரும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். நிச்சயமாக இரண்டு அணிகளும் இணையும் என நம்புகிறேன்.


இவ்வாறு கூறினார்.