தலைநகர் டெல்லியில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில்  தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார் நடிகர் ரஜினிகாந்த். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில் நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) கடந்த 28 ஆம் தேதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர்.


ALSO READ | ரஜினிகாந்த் அண்ணாத்த பார்க்க தியேட்டருக்கு வருவார்:  ஒய். ஜி. மகேந்திரன்


நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு முதற்கட்ட கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அவருக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனை, மேற்கொண்டபோது ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப் பட்டது. இதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில், இரத்த நாளங்களில் அடைப்பு சரி செய்யப்பட்டு, அவர் உடல் நலன் தற்போது நன்ராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை ஒன்றில் கூறியது. 


இந்த நிலையில், தற்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவமனைக்கு நெரில் சென்று, சிகிச்சை பெற்று வரும் ரஜினி காந்திடம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், மருத்துவமனை மருத்துவர்களிடம் ரஜினிகாந்துக்கு  அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்துள்ளார்.


முன்னதாக அருமை நண்பர் நடிகர் ரஜினிகாந்த் விரைந்து நலம் பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | ராகவா லாரன்ஸின் பிறந்தநாளன்று புதிய திரைப்பட அறிவிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR