சென்னை: இன்று தமிழ்நாட்டில் 1872  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்று தொடங்கியது முதல் இன்றுவரை தமிழகத்தில் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,43,040 ஆக அதிகரித்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 29 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர். இதனுடன் சேர்த்து தமிழகத்தில்  கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33,808 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 25,526 ஆக உள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 2,475 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,83,676 ஆக உயர்ந்துள்ளது.



இன்றைய நிலவரம்: 
• இன்றைய பாதிப்பு - 1872


• இன்றைய மரணங்கள் - 29


• மொத்த பாதிப்பு - 25,43,040 


• இன்றைய டிஸ்சார்ஜ் - 2,475


• இன்று செய்யப்பட்ட மொத்த கொரோனா சோதனைகள் - 1,45,584


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. ஜூன் மாதம் முதல் தினசரி பாதிப்பு குறைந்து கொண்டே வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்ததுடன், தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டது. இவ்வாறான கடுமையான கட்டுப்பாடுகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிந்தது.  


Also Read | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR