சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாகவும்,  சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையை அடுத்து தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 


ஊரடங்கு நீட்டிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:


- செப்டம்பர் 1 முதல் 9,10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகளை (TN Schools) திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


- செப்டம்பர் 1 முதல் கல்லூரிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


- ஆகஸ்ட் 23 முதல் 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.


- நீச்சல் குளங்கள், பூங்காக்களில் 50% பேர் அனுமதிக்கப்படலாம்.


- 100% பணியாளர்களுடன் ஐ.டி. நிறுவனங்கள் செயல்படலாம்.


ALSO READ: இன்று முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR