கடந்த மார்ச் மாதம் பிளஸ்-1 தேர்வு முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள்  காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும். தமிழகத்தில் பிளஸ் 1 முடிவுகளை ஜூலை 31, 2020 அன்று அதிகாரப்பூர்வ வலைத்தளமான tnresults.nic.in மற்றும் dge.tn1.gov.in இல் வெளியிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.


 


ALSO READ புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்... MHRD பெயர் மாற்றம்...


நடைபெற்ற மார்ச் 2020 மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய மற்றும் ஜூலை 27 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு மறுதேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் ஜூலை 31 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.


தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in.


 


ALSO READ | 2020-21 கல்வியாண்டில் இந்தியாவில் 179 தொழில்முறை கல்லூரிகள் மூடல்: AICTE


பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்குத் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்பப்படும்.


தமிழகத்தில் 8.32 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. பிளஸ்-2 மறுவாய்ப்பு கடைசித்தேர்வை 519 மாணவ, மாணவிகள் எழுதியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.