தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகியது. அதில் பல்வேறு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் தந்தையை இழந்த மாணவன், கடும் வறுமையிலும் தனது தாயின் முயற்சியோடு படிப்பை தொடர்ந்து பத்தாம் வகுப்பில் மாவட்டத்தில் முதல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகம். இவரது மனைவி பண்டாரச் செல்வி. இவர்களது மகன் அர்ஜூன பிரபாகரன். அர்ஜூன பிரபாகரன், திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் பள்ளியான, மதிதா இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்தார். 


துயரமான குடும்பச் சூழல்


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவன் அர்ஜூன பிரபாகரனின் தந்தை மாணிக்க வாசகம் உயிரிழந்துவிட்டார். இதனால் வீட்டில் வறுமை சூழ்ந்து கொண்டது. கணவனை இழந்த நிலையில் எப்படியாவது தனது மகனை படிக்க வேண்டும் என பண்டாரச்செல்வி ஆசைப்பட்டுள்ளார். அதேபோல் மாணவனின் நிலைமையை அறிந்த பள்ளி நிர்வாகமும் அவனுக்கு பல்வேறு உதவிகளை செய்தனர்.


மேலும் படிக்க |  10, 11ஆம் வகுப்பில் தோல்வியா... கவலையே வேண்டாம் - துணை தேர்வு அட்டவணை அறிவிப்பு!


அனைத்தும் ஆசிரியர்கள் தான்!


குறிப்பாக, காலை மற்றும் மதியம் இரண்டு வேளை இலவசமாக உணவு வழங்குவது முதல் அவ்வப்போது வரும் படிப்பு செலவுகளுக்கு ஆசிரியர்களே பண உதவியும் செய்துள்ளனர். இதன் காரணமாக மாணவன் அர்ஜுன பிரபாகரன் விடாமுயற்சியுடன் தனது படிப்பில் கவனம் செலுத்தியுள்ளார் அதன் விளைவாக இன்று வெளியான பொதுத்தேர்வு முடிவில் மாணவனின் அர்ஜூன பிரபாகரன் 495 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.


இரண்டு சென்ட்டம்


தந்தையை இழந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பாடங்களை சிறப்பாக படித்து வந்துள்ளார். போதுமான குடும்ப வருமானம் இல்லாத நிலையில் தாய் கூலி வேலை செய்து இவர்களை காப்பாற்றி வந்துள்ளார். குடும்ப செலவிற்கே வருமானம் போதாத நிலையில் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் இவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வந்துள்ளனர். 


தமிழில் 97, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 99, சமூக அறிவியல் 100 மதிப்பெண்கள் அவருக்கு கிடைத்துள்ளது. இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்றுள்ளார். தந்தை இல்லாத நிலையிலும் ஏழ்மையான குடும்ப சூழலும், யாரும் படிக்க கட்டாயப்படுத்தாத சூழ்நிலையிலும் மாணவர் அர்ஜூன பிரபாகர் அசத்தல் வெற்றி பெற்றுள்ளார். 


பாரதிக்கே பெருமை


பள்ளியின் ஆசிரியர்கள் இணைந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளனர். ஆசிரியர்களும் பெற்ற தாயும் பெருமை கொள்ளும் வகையில் அவரது மதிப்பெண்கள் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மேலும் மகாகவி பாரதியார் பயின்ற இந்த பள்ளியை சேர்ந்த மாணவர் மாவட்ட அளவில் முதலாவது மதிப்பெண்ணை பெற்று பள்ளியையும், பாரதியையும் தலை நிமிர  செய்துள்ளார். 


மாணவனின் கனவு


இதுகுறித்து மாணவன் அர்ஜுன பிரபாகரன் கூறும்போது,"பள்ளியில் ஆசிரியர்கள் எனக்கு பெரிதும் உதவி செய்தனர். அதனால் தான் 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. எனது தந்தை உயிரிழந்துவிட்டார், அம்மா கூலி வேலை செய்து வருகிறார். மாவட்டத்தின் முதல் மதிப்பெண் எடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மருத்துவர் அல்லது இன்ஜினியராக வேண்டும் என்பதே எனது கனவு" என்றார். 


மேலும் படிக்க | இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்களே... கவுன்சிலிங் எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ