கடந்த இரண்டு வருடங்களாகவே பரவலாக அனைவரது காதிலும் ஒலிக்கக்கூடிய ஒரு சொல் கொரோனா வைரஸ். உலக மக்கள் அனைவரையும் நடுநடுங்க செய்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. பல்வேறு வகையாக அவை உருமாறிக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க உலக நாடுகள் பலவும் பல்வேறு விதமான நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது. அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தடுப்பூசி செலுத்துதல் போன்ற பல வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தாலும் கொரோனாவின் தாக்கம் தணியவில்லை. மேலும் அரசு வகுத்த கட்டுப்பாடுகளும் முக்கியமானது ஊரடங்கு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு (Lockdown) செயல்முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள், போக்குவரத்து என அனைத்து செயல்பாடுகளும் ஸ்தம்பித்தது. ஆனால் சில தினங்களுக்கு பிறகு கொரோனாவின் (Corona Spread) தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியதையடுத்து படிப்படியாக ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்பட்டு வந்தது. மேலும் மக்களை காக்கும் பொருட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக்கப்பட்டது.


ALSO READ | எகிறும் கொரோனா பாதிப்பு..! 9,000 நெருங்கும் தமிழகம்


கடந்த ஆண்டில் ஊரடங்கு தளர்வுகள் (TN Lockdown Update 2022) அதிகம் அளிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் சிறிது உற்சாகத்துடன் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி கொண்டிருந்தனர். அதன்படி தற்போது கொரோனாவின் மாறுபாடான ஒமிக்ரான் மக்களை மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கொரோனா அளவிற்கு ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் இதன் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது. 


இந்த ஒமிக்ரான் பரவல் தமிழகத்திற்குள் ஊடுருவியதால், மீண்டும் ஊரடங்கு எனும் இருண்ட அறைக்குள் மக்கள் தள்ளப்படும் நிலை உருவாகியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஜனவரி-6ம் தேதிஎன்று தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இரவு நேரதில் 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணி வரைக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தளங்களுக்கு செல்லவும், நிகழ்ச்சிகளில் அதிகமானோர் கூடவும், தியேட்டர்களில் 50% மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்த பட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கோவை மாவட்டத்தில் தினசரியாக 100 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 500 பேர் வரை பாதிக்கப்படு வருகின்றனர்.


ALSO READ | Corona Curfew: நள்ளிரவு ஊரடங்கு அமல் விதிமுறைகள் மீறல்! போலீசார் எச்சரிக்கை!!


இதனிடையே ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு நகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.


இதேபோல் முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் நகரம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெளியே வருபவர்களை அடிக்க மாட்டோம் என்றும் நியாயமான காரணங்களுக்காக வருபவர்களுக்கு உதவி செய்வோம் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | சென்னையில் மாஸ்க் அபராதம்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR