தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்தாள் தேர்வு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் தாள் தேர்வு அக்டோபர் 7-ம் தேதியும் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. முடிவுகள் நவம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற விரிவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை அரசு ரத்து செய்திருந்தது. 


தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்திருந்த நிலையில், விரிவுரையாளர் பணியிடங்களுக்கானத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.