சென்னை: தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 385 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 7,81,915 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்தது.


அதேநேரத்தில் இன்று 1,456 பேர் குணமடைந்து (Today's Discharged) வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 7,59,206 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.


ALSO READ |  தமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி?


10,997 பேர் மருத்துவமனை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 62,616 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,20,60,001* பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.


இன்றைய நிலவரம்: 30-11-2020
கொரோனா பாதிப்பு - 1,410
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 10,997
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 62,616 
குணமடைந்து வெளியேறியவர்கள் - 1,456 
இறப்பு - 9



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR