தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தக்காளியை தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் ஏற வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்றமும் இறக்கமுமாய் தக்காளியின் விலை..!


தமிழகத்தில் தக்காளியின் வரத்தை பொறுத்து அதன் விலை ஏறுவதும் இறங்குவதுமாய் உள்ளது. தமிழகம் மட்டுமன்றி, தென்னிந்தியாவின் பல மாவட்டங்கள் இந்த பிரச்சனையை சந்தித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் ஒரு நாளைக்கு இருக்கும் தக்காளியின் விலை அடுத்தநாள் இருப்பதில்லை. சில மாதங்களுக்கு முன்பு வரை ரூபாய் 30-40க்கு விற்று வந்த ஒரு கிலோ தக்காளி,  சில நாட்களுக்கு முன்பு வரை சில்லறை விற்பனையில் 200 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஒரு கிலோ தக்காளியின் விலை கோயம்பேடு சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 150 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்க்கப்பட்டது. இதில், முதல் ரக தக்காளி 120 ரூபாயாகவும், இரண்டாம் ரக தக்காளி கிலோவிற்கு 80 ரூபாயாக கோயம்பேட்டில் விற்க்கப்பட்டது.


மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை


இன்றைய தக்காளி விலை நிலவரம்:


நேற்றைய நிலவரப்படி, சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி ஒரு கிலோவுக்கு 20 ரூபாய் குறைந்தது. மொத்த விற்பனையில் தக்காளி ஒரு கிலோவிற்கு 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து சுமார் 600 டன் தக்காளி சந்தைக்கு வந்து இறங்கியதாக வியாபாரிகள் நேற்று தெரிவித்தனர். மேலும், இனி வரும் நாட்களில் தக்காளியின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கூறினர். கணிசமாக குறைந்து வந்த தக்காளியின் விலை, இன்றும் விலை மாற்றமின்றி நேற்று போல ஒரு கிலோ 100 ரூபாயாக விற்கப்படுகிறது. 


வெங்காயத்தின் விலை உயரும் அபாயம்..!


சமையலில் அதிகம் உபயோகப்படுத்தப்படும் காய்கறியான வெங்காயத்தின் விலை இம்மாத இறுதியில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதத்தில் சில்லரை விற்பனையில் வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரிக்கும் என ஒரு பிரபல நிருவனம் நடத்திய பகுப்பாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் செப்டம்பர் மாதத்தில் வெங்காயத்தின் விலை 60-70ரூபாய் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆனால், 2020ஆம் ஆண்டு அதிகரித்த வெங்காயத்தின் விலை அளவிற்கு இந்த விலையேற்றம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் காரீப்பருவ வகை வெங்காயத்தின் வரத்து தொடங்குவதால் அப்போது வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறத். அது மட்டுமன்றி, பண்டிகைகள் அதிகம் உள்ள மாதங்களான அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் விலை சீராகும் என நம்பப்படுகிறது. 


இன்றைய காய்கறி விலை நிலவரம்:


கோயம்பேட்டில் இன்று தக்காளி-வெங்காயம் மட்டுமன்றி பல்வேறு காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 


>அவரைக்காய் கிலோவிற்கு சுமார் 40  ரூபாயாக விற்கப்படுகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாயாகவும்  கத்திரிக்காய் கிலோ ஒன்றிற்கு 40  ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


>பச்சை குடைமிளகாய் கிலோவுக்கு ஒன்றிற்கு 60  ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் ஒரு கிலோவிற்கு 180 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 


>கேரட் கிலோவுக்கு 50 ரூபாயாகவும் பீன்ஸ் ஒரு கிலோவுக்கு சுமார் 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதன் விலையில் பல நாட்களாக மாற்றம் இல்லை. 


>வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. வெள்ளை வெங்கயாம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 32 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. இதன் விலையிலும் பல மாதங்களாக மாற்றம் இல்லை. 


மேலும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சிக்கியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ