நாளை தைப்பொங்கல் திருநாளையொட்டி திமுக தலைவர் கருணாநிதி நாளை தொண்டர்களை சந்திக்க உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு வருடமும் தைத்திங்களில் தொண்டர்களை சந்தித்து கருணாநிதி 10 ரூபாய் பரிசாக வழங்குவார். இது காலகாலமாக பின்பற்றப்பட்டு வந்தது.


சமீபகாலமாக உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு அவர் தொண்டர்களை சந்திக்கவில்லை. இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் தொண்டர்களை சந்திக்கிறார். அப்போது அவர், தொண்டர்களுக்கு புதிய 50 ரூபாய் நோட்டு வழங்க உள்ளார். 
இதனால் அவரது கோபாலபுரம் வீடு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.