தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு ஜாமீன் வழங்கியது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வைகோவின் ஜாமீன் மனு இன்று 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வைகோவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.


தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். 


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது தேசத் துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு சிறைதண்டனை அளித்து எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ, வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று வைகோ மனு செய்தார். இதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரததால் அவர் கடந்த 51 நாட்களாக சிறையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.