திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் இவரது மகன் செல்வராஜ் (27) மனைவி டயானா மேரி (22)மாமியார் இன்னாசியம்மாள்(40) இவர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்வராஜூக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடித்துவிட்டு வரும்போதெல்லாம் மாமியாரிடம் செல்வராஜூ பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அடிக்கடி நடந்த இந்த தொல்லையால் செல்வராஜின் மனைவி மற்றும் அவரது அம்மா இருவரும் மனம் நொந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குன்னூரில் முகாமிட்டிருக்கும் காட்டு யானைகள்... பீதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்!


இதனால், டயானா மேரியும், இன்னாசி அம்மாளும் கடந்த 5 ஆம் தேதி செல்வராஜ் மீது சுடு தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து ஊற்றியுள்ளனர். இதில் செல்வராஜ  உடல் முழுவதும் வெந்து போய் உள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்வராஜை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி  பறிதாபமாக உயிரிழந்தார்.


இச்சம்பவம் குறித்து ஏற்கனவே  திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து  மேரியையும், இன்னாசி அம்மாளையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இப்போது, செல்வராஜ் இறந்துள்ளதால் இந்த வழக்கை திருவெறும்பூர் போலீசார் கொலை வழக்கமாக மாற்றி விசாரணை செய்து வருகின்றனர். மிள காய்பொடி கலந்த சுடு தண்ணீரை ஊற்றி வாலிபர் கொலையில் மாமியார் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | பெண்களை பேசி மயக்கி 'பாவம்' செய்த பாதிரியார்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ